நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு: பழைய பஸ் பாஸ் உடன் பயணிக்கலாம் - போக்குவரத்துக் கழக தலைமை உத்தரவு..!

8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்தி, பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் புதிய பஸ் பாஸ் எடுக்கவில்லை.

இந்த நிலையில், 'எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்தி, பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்' என போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன. வரும் 1ம் தேதி முதல், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளைத் துவக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய பஸ் பாஸ் வழங்கப்படாததால், பழைய பஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டை, சீருடையைப் பார்த்து, மாணவர்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கும்படி, ஓட்டுனர், நடத்துநர்களுக்குப் போக்குவரத்துக் கழக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...