கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய திருப்பம்: விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் கனகராஜ் உறவினர்கள் இருவர் கைது

இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் (44) மற்றும் ரமேஷ் (34) ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து, கூடலூர் சிறையில் அடைத்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கொடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. தொடர்ந்து எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த கனகராஜ் தேடப்பட்டு வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில், கனகராஜ் பலியானார். கனகராஜ் மரணம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் (44), மற்றும் ரமேஷ் (34) ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...