கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய திருப்பம்: விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் கனகராஜ் உறவினர்கள் இருவர் கைது

இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் (44) மற்றும் ரமேஷ் (34) ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து, கூடலூர் சிறையில் அடைத்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கொடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. தொடர்ந்து எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த கனகராஜ் தேடப்பட்டு வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில், கனகராஜ் பலியானார். கனகராஜ் மரணம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் (44), மற்றும் ரமேஷ் (34) ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...