மின்சாரத் துறை மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி.!!

மின்சாரத் துறையில் முறைகேடு புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் புகாா்கள் குறித்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.


கோவை: பாஜக சார்பில் கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட அலபி மாவட்டத்திற்குக் கோவையிலிருந்து சுமார் 6-லட்ச ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.



அந்த வாகனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களின் உள் விவகாரங்களில் குறித்து இந்த நேரத்தில் நான் கருத்துச் சொன்னால் அது தவறாக இருக்கும் என கூறினார்.



யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்த அவர் சசிகலா வருகை குறித்த விவகாரத்தை அந்த கட்சிக்குள் தான் பேசிக்கொள்கின்றனர் என்றும் அதில் உள்ளே புகுந்து நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.

நமது அம்மா நாளிதழ் அண்ணாமலையைப் பாராட்டி எழுதி இருப்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர் யார் திட்டினாலும், பாராட்டினாலும் ஆதாரங்களோடு திட்டுங்கள், பாராட்டுங்கள் என பதிலளித்தார்.

திமுகவை பா.ஜ.வும் சரி அதிமுகவும் சரி விமர்சனம் செய்கிறது. அதிமுகவில் இருந்து இபிஎஸ் கூட சமீபத்தில் திமுகவைக் கண்டித்து அறிக்கை கொடுத்து உள்ளார். பாஜக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது எனவும் கூறினார்.

எந்த குழப்பமும் இல்லாமல் மக்கள் பிரச்சினையை அரசிடம் கொண்டு சொல்கின்றோம் என தெரிவித்த அவர், சில இடங்களில் நாங்கள் சொல்வதைத் தமிழக முதல்வரும் செவி சாய்த்துக் கேட்டுக்கொள்கின்றார் எனவும் எடுத்துக்காட்டாகக் கோவில்களைத் திறப்பது, ஆவின் டெண்டர் போன்றவற்றைத் தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக பேசுவது எல்லாம் பா.ஜ.கவை எதிர்த்துத்தான் எனவும் அப்படி இருக்கும் போது திமுக பா.ஜ.க இடையேதான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுவதாகவும் அதிமுக தமிழகத்திலிருந்து கருத்துகளை முன் வைக்கின்றனர். இந்தியா சார்பிலிருந்து பா.ஜ.க கருத்துகளைத் தெரிவிக்கின்றது என தெரிவித்தார்.

கருத்தியல் அரசியல் பா.ஜ.க, திமுக இடையேதான் நடக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் யார் எதிர்க்கட்சி என்பதில் அதிமுக, பா.ஜ.கவிடையே போட்டி இல்லை என்றும், ஒன்றாக இருக்கின்றோம், என தெரிவித்தார்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என கூரிய அவர் மக்கள் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்து என்பதால் விடையை மக்களிடமே விட்டுவிடலாம் என தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் PPAவில் ஊழல் நடக்கப் போகின்றது, அதைச் சுட்டி காட்டுகின்றோம் என்றும் அமைச்சர் முதலில் அவர் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுக் கேட்கட்டும், பதில் சொல்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயிலிருந்தே ஆதாரம் வரும், என தெரிவித்த அவர், திமுக பா.ஜ.க இடையே கருத்து மோதல்கள் நடைபெறவில்லை எனவும், கொடுத்த ஆதாரங்களுக்கே இதுவரை பதில் வரவில்லை எனவும் தெரிவித்தார். ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை என தெரிவித்த அவர் முதல்வர் மின்துறை மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...