கோவையில் டெங்கு பரவல் அதிகரிப்பு: இதுவரை 23-பேருக்கு பாதிப்பு.!!

கடந்த ஒரு மாதத்தில் 23-பேர் டெங்குகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் டெங்குகாய்ச்சல் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்குகாய்ச்சல் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இதனால் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒரு மாதத்தில் 23-பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், காய்ச்சலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சித் துறை பள்ளிக் கல்வித் துறை இணைந்து சுகாதாரத்துறை பணியாற்றி வருகிறது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதார அதிகாரி சதீஷ் குமார் கூறுகையில்:-

கோவை நகரில் ஒரே மாதத்தில் இருபத்தி மூன்று பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மாநகராட்சிகள் டெங்கு தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் டெங்குகாய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 12-வட்டாரங்களில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் குழு குழுவில் சுகாதாரத்துறை அலுவலர் ஆய்வாளர்கள் உள்ளனர்.

இவர்கள் மாவட்டத்தில், உள்ள வீடுகள் கம்பெனிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து, கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கூறும்போது மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், டெங்குகாய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு பகுதியாக டெங்கு கொசு உற்பத்தியாகும் குறைகளைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சட்ட விதிமுறைகளை மீறி தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பவர்கள் மீது அபராதங்கள் விதித்து வருகின்றன.

டெங்குகாய்ச்சல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 23-பேர் டெங்குகாய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...