கோவையில் பேருந்துக்குள் ஒழுகிய மழை நீர்: ஓட்டை உடசல்... பயணிகள் அவதி.!!

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.


கோவை: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது.



இந்நிலையில் கருமத்தம்பட்டி பகுதியிலிருந்து அன்னூருக்குச் சென்ற புறநகர் (A11)பேருந்தின் உட்பகுதியில் மழைநீர் உள்ளே வடிந்தது.

இதனால் பேருந்தில் அமர முடியாமல் நின்றபடி பயணம் மேற்கொண்டனர். கடந்த ஒரு மாத காலமாகத் தொடர் மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதியில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மழையில் நனைந்தபடியே பயணிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

மழைக்காலங்களில் பொது மக்கள் நனையாமல் பயணிக்கும் அளவிற்குப் பேருந்துகளை ரிப்பேர் செய்து இயக்கிடப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...