கோவையில் பேருந்துக்குள் ஒழுகிய மழை நீர்: ஓட்டை உடசல்... பயணிகள் அவதி.!!

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.


கோவை: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது.



இந்நிலையில் கருமத்தம்பட்டி பகுதியிலிருந்து அன்னூருக்குச் சென்ற புறநகர் (A11)பேருந்தின் உட்பகுதியில் மழைநீர் உள்ளே வடிந்தது.

இதனால் பேருந்தில் அமர முடியாமல் நின்றபடி பயணம் மேற்கொண்டனர். கடந்த ஒரு மாத காலமாகத் தொடர் மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதியில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மழையில் நனைந்தபடியே பயணிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

மழைக்காலங்களில் பொது மக்கள் நனையாமல் பயணிக்கும் அளவிற்குப் பேருந்துகளை ரிப்பேர் செய்து இயக்கிடப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...