ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ மாணவிகளுடன் மாநகராட்சி ஆணையர் கலந்துரையாடல்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஸ்வச்சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இன்று கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் பல கல்வி நிறுவனங்களில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில், ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். 



மாணவர்களின் மூலமாக ஸ்வச் பாரத் திட்டத்தினை அதிகளவில் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லமுடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் மாநகராட்சியுடன் மக்கள் ஒத்துழைப்பு தந்து அதிகபட்ச சுகாதாரத்தினை அடைய முடியும். இது ஸ்வச் சர்வேக்ஷன் 2017 விருதினை பெறவும் வழிவக்கும்.

மத்திய நகர்ப்புற  அமைச்சகத்தின் மூலம் ஸ்வச்பாரத் திட்டத்தின் கீழ் ஸ்வச்சர்வேக்ஷன் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் சுகதார அளவுகள் மற்றும் அதற்கான உள்ளாட்சி  அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்.

கோவை மாநகராட்சி இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக நகரங்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஸ்வச்சதா செயலி மூலம் மக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...