சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சேனல் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் "ராசி பிரைம் மூவி" என்ற உள்ளூர் சேனலின் நிறுவனர், மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாமல் நிலுவையில் இருந்த "ஜனநாயகன்" திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11.04.2026 அன்று நடைபெற்ற இந்த சட்டவிரோத வெளியீடு தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.



தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கோவை புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மோகனப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. Karthikeyan உத்தரவின்படி இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், மத்திய தணிக்கை குழுவின் சான்றிதழுக்கு காத்திருக்கும் "ஜனநாயகன்" திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக பகிரப்பட்ட லிங்க் மூலம் "ராசி பிரைம் மூவி" உள்ளூர் சேனலில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செயல் திரைப்படம் மற்றும் பதிப்புரிமை சட்டங்களை மீறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கருமத்தம்பட்டி சோமனூர் மெயின் ரோடு ராம் நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (44) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட கம்ப்யூட்டர், 5 ஹார்ட் டிஸ்க்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்திற்கு புறம்பாக திரைப்படங்களை வெளியிட்டதாக "ராசி டிவி" சேனலின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த சேனல் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து ஒளிபரப்பு நடவடிக்கைகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, இணையத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் பதிப்புரிமை கொண்ட உள்ளடக்கங்களை சட்டவிரோதமாக பகிர்வு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பதிப்புரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறை உதவி எண்களுக்கோ தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இணையத்தில் சட்டவிரோத திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதும், பார்ப்பதும் குற்றமாகும் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...