'எங்களுக்கும் ஒரு வீடு' -பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் கோரிக்கை மனு.!!

சுய தொழில் தொடங்க கடன் மற்றும் இலவச பட்டா கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.


பொள்ளாச்சி: சுய தொழில் தொடங்க கடன் மற்றும் இலவச பட்டா கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் பேருந்து நிலையங்கள், வணிக வளாக கடைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு தங்களில் வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர்.

ஒரு சிலர் மட்டும் சமையல் வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று சுய தொழில் தொடங்குவதற்காக வங்கிகளில் கடன் கேட்டால் அதிகாரிகள் தர மறுப்பதாகவும் எனவே தங்களுக்கு உணவகங்கள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், போன்ற சிறு தொழில் செய்வதற்குக் கடனுதவி வழங்க வேண்டும்.



அதேபோல் பல ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும். மேலும் 60-வயதைக் கடந்த திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...