'எங்களுக்கும் ஒரு வீடு' -பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் கோரிக்கை மனு.!!

சுய தொழில் தொடங்க கடன் மற்றும் இலவச பட்டா கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.


பொள்ளாச்சி: சுய தொழில் தொடங்க கடன் மற்றும் இலவச பட்டா கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் பேருந்து நிலையங்கள், வணிக வளாக கடைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு தங்களில் வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர்.

ஒரு சிலர் மட்டும் சமையல் வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று சுய தொழில் தொடங்குவதற்காக வங்கிகளில் கடன் கேட்டால் அதிகாரிகள் தர மறுப்பதாகவும் எனவே தங்களுக்கு உணவகங்கள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், போன்ற சிறு தொழில் செய்வதற்குக் கடனுதவி வழங்க வேண்டும்.



அதேபோல் பல ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும். மேலும் 60-வயதைக் கடந்த திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...