'எங்களுக்கும் ஒரு வீடு' -பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் கோரிக்கை மனு.!!

சுய தொழில் தொடங்க கடன் மற்றும் இலவச பட்டா கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.


பொள்ளாச்சி: சுய தொழில் தொடங்க கடன் மற்றும் இலவச பட்டா கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் பேருந்து நிலையங்கள், வணிக வளாக கடைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு தங்களில் வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர்.

ஒரு சிலர் மட்டும் சமையல் வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று சுய தொழில் தொடங்குவதற்காக வங்கிகளில் கடன் கேட்டால் அதிகாரிகள் தர மறுப்பதாகவும் எனவே தங்களுக்கு உணவகங்கள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், போன்ற சிறு தொழில் செய்வதற்குக் கடனுதவி வழங்க வேண்டும்.



அதேபோல் பல ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும். மேலும் 60-வயதைக் கடந்த திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...