தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கிணத்துக்கடவு காவல்துறையினர் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நள்ளிரவில் நேரத்தில் கிணத்துக்கடவு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.ரோடு, பழைய செக்போஸ்ட், மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்த 6-பேரை பிடித்தனர்.
மேலும் ஆறு பேர் மீதும் சந்தேக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கிணத்துக்கடவு காவல்துறையினர் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நள்ளிரவில் நேரத்தில் கிணத்துக்கடவு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.ரோடு, பழைய செக்போஸ்ட், மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்த 6-பேரை பிடித்தனர்.
மேலும் ஆறு பேர் மீதும் சந்தேக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.