கோவை அருகே பணம் வைத்து சேவல் சண்டை விட்ட 11 பேர் கைது..!

அன்னூர் அருகே பச்சாகவுண்டனுார் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கைது செய்தனர்.


கோவை: கோவை அருகே பணம் வைத்து சேவல் சண்டை விட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை அன்னூர் அருகே பச்சாகவுண்டனுார் பகுதியில், பணம் வைத்து, சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையிலான போலீசார், பச்சாகவுண்டனுார் பள்ளம் அருகே, சேவல் சண்டையில் ஈடுபட்ட செல்வராஜ் (27), ஆறுமுகம் (33), வீரமணி (22), சுரேந்தர் (25), ராஜகோபால் (56) ஆகிய ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, எஸ்.ஐ., வெங்கடேசன் தலைமையிலான போலீசார், பச்சாகவுண்டனுார் சுடுகாடு அருகே சேவல் சண்டை நடத்திய, பொன்னுசாமி (62), மோகன்ராஜ் (24), குணசேகரன் (23), குமார் (31), தியாகராஜன் (32), முருகேசன் (30) ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...