அன்னூர் அருகே பச்சாகவுண்டனுார் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கைது செய்தனர்.
கோவை: கோவை அருகே பணம் வைத்து சேவல் சண்டை விட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை அன்னூர் அருகே பச்சாகவுண்டனுார் பகுதியில், பணம் வைத்து, சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையிலான போலீசார், பச்சாகவுண்டனுார் பள்ளம் அருகே, சேவல் சண்டையில் ஈடுபட்ட செல்வராஜ் (27), ஆறுமுகம் (33), வீரமணி (22), சுரேந்தர் (25), ராஜகோபால் (56) ஆகிய ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, எஸ்.ஐ., வெங்கடேசன் தலைமையிலான போலீசார், பச்சாகவுண்டனுார் சுடுகாடு அருகே சேவல் சண்டை நடத்திய, பொன்னுசாமி (62), மோகன்ராஜ் (24), குணசேகரன் (23), குமார் (31), தியாகராஜன் (32), முருகேசன் (30) ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை அன்னூர் அருகே பச்சாகவுண்டனுார் பகுதியில், பணம் வைத்து, சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையிலான போலீசார், பச்சாகவுண்டனுார் பள்ளம் அருகே, சேவல் சண்டையில் ஈடுபட்ட செல்வராஜ் (27), ஆறுமுகம் (33), வீரமணி (22), சுரேந்தர் (25), ராஜகோபால் (56) ஆகிய ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, எஸ்.ஐ., வெங்கடேசன் தலைமையிலான போலீசார், பச்சாகவுண்டனுார் சுடுகாடு அருகே சேவல் சண்டை நடத்திய, பொன்னுசாமி (62), மோகன்ராஜ் (24), குணசேகரன் (23), குமார் (31), தியாகராஜன் (32), முருகேசன் (30) ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.