38- வயது பெண்ணை ஏமாற்றிய 26-வயது வங்கி ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை: தன்னை விட பத்து வயதுக்கு மேல் உள்ள மூத்த பெண்ணுடன் பழகி ஏமாற்றியதாக, வங்கி ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை, வெள்ளலுாரை சேர்ந்த திருமணமாகாத, 38-வயது பெண் எம்.சி.ஏ., படித்துவிட்டு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவர் கொரோனா நேரத்தில் ஐ.டி., வேலையும் பறிபோனதால், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டு, தனியாக சரவணம்பட்டியில் ஒரு விடுதியில் தங்கினார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இச்சூழலில், சிங்காநல்லுாரில் தான் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கிக்கு சென்று வந்தபோது, அந்த வங்கியில் பணியாற்றும் சிங்காநல்லூரைச் சேர்ந்த மவுனீஸ்வரன், 26 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி, பெண் நெருங்கிப் பழக மறுத்துள்ளார். ஆனால், 'நான் வயது வித்தியாசம் பார்க்கவில்லை;
கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன்' என, வாலிபர் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து, வாலிபர் தேவைப்படும் போதெல்லாம் பணம் பெற்று வந்தார். இச்சூழலில் திடீரென பெண்ணுடன் பேசுவதை வாலிபர் தவிர்த்தார். இதுகுறித்து கேட்டபோது, 'நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்; எங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் இனிமேல் என்னுடன் பேச வேண்டாம்' என, வாலிபர் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், அனைத்து மகளிர் கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மவுனீஸ்வரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை, வெள்ளலுாரை சேர்ந்த திருமணமாகாத, 38-வயது பெண் எம்.சி.ஏ., படித்துவிட்டு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவர் கொரோனா நேரத்தில் ஐ.டி., வேலையும் பறிபோனதால், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டு, தனியாக சரவணம்பட்டியில் ஒரு விடுதியில் தங்கினார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இச்சூழலில், சிங்காநல்லுாரில் தான் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கிக்கு சென்று வந்தபோது, அந்த வங்கியில் பணியாற்றும் சிங்காநல்லூரைச் சேர்ந்த மவுனீஸ்வரன், 26 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி, பெண் நெருங்கிப் பழக மறுத்துள்ளார். ஆனால், 'நான் வயது வித்தியாசம் பார்க்கவில்லை;
கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன்' என, வாலிபர் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து, வாலிபர் தேவைப்படும் போதெல்லாம் பணம் பெற்று வந்தார். இச்சூழலில் திடீரென பெண்ணுடன் பேசுவதை வாலிபர் தவிர்த்தார். இதுகுறித்து கேட்டபோது, 'நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்; எங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் இனிமேல் என்னுடன் பேச வேண்டாம்' என, வாலிபர் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், அனைத்து மகளிர் கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மவுனீஸ்வரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.