உனக்கு-38 எனக்கு-26... கோவையில் பெண்ணை ஏமாற்றிய வங்கி ஊழியர்: 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.!!

38- வயது பெண்ணை ஏமாற்றிய 26-வயது வங்கி ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


கோவை: தன்னை விட பத்து வயதுக்கு மேல் உள்ள மூத்த பெண்ணுடன் பழகி ஏமாற்றியதாக, வங்கி ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோவை, வெள்ளலுாரை சேர்ந்த திருமணமாகாத, 38-வயது பெண் எம்.சி.ஏ., படித்துவிட்டு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவர் கொரோனா நேரத்தில் ஐ.டி., வேலையும் பறிபோனதால், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டு, தனியாக சரவணம்பட்டியில் ஒரு விடுதியில் தங்கினார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இச்சூழலில், சிங்காநல்லுாரில் தான் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கிக்கு சென்று வந்தபோது, அந்த வங்கியில் பணியாற்றும் சிங்காநல்லூரைச் சேர்ந்த மவுனீஸ்வரன், 26 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி, பெண் நெருங்கிப் பழக மறுத்துள்ளார். ஆனால், 'நான் வயது வித்தியாசம் பார்க்கவில்லை;

கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன்' என, வாலிபர் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து, வாலிபர் தேவைப்படும் போதெல்லாம் பணம் பெற்று வந்தார். இச்சூழலில் திடீரென பெண்ணுடன் பேசுவதை வாலிபர் தவிர்த்தார். இதுகுறித்து கேட்டபோது, 'நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்; எங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் இனிமேல் என்னுடன் பேச வேண்டாம்' என, வாலிபர் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், அனைத்து மகளிர் கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மவுனீஸ்வரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...