உனக்கு-38 எனக்கு-26... கோவையில் பெண்ணை ஏமாற்றிய வங்கி ஊழியர்: 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.!!

38- வயது பெண்ணை ஏமாற்றிய 26-வயது வங்கி ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


கோவை: தன்னை விட பத்து வயதுக்கு மேல் உள்ள மூத்த பெண்ணுடன் பழகி ஏமாற்றியதாக, வங்கி ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோவை, வெள்ளலுாரை சேர்ந்த திருமணமாகாத, 38-வயது பெண் எம்.சி.ஏ., படித்துவிட்டு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவர் கொரோனா நேரத்தில் ஐ.டி., வேலையும் பறிபோனதால், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டு, தனியாக சரவணம்பட்டியில் ஒரு விடுதியில் தங்கினார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இச்சூழலில், சிங்காநல்லுாரில் தான் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கிக்கு சென்று வந்தபோது, அந்த வங்கியில் பணியாற்றும் சிங்காநல்லூரைச் சேர்ந்த மவுனீஸ்வரன், 26 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி, பெண் நெருங்கிப் பழக மறுத்துள்ளார். ஆனால், 'நான் வயது வித்தியாசம் பார்க்கவில்லை;

கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன்' என, வாலிபர் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து, வாலிபர் தேவைப்படும் போதெல்லாம் பணம் பெற்று வந்தார். இச்சூழலில் திடீரென பெண்ணுடன் பேசுவதை வாலிபர் தவிர்த்தார். இதுகுறித்து கேட்டபோது, 'நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்; எங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் இனிமேல் என்னுடன் பேச வேண்டாம்' என, வாலிபர் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், அனைத்து மகளிர் கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மவுனீஸ்வரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...