கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக 1000 போலீசார் குவிப்பு..!

குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் வெகு சில நாள்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பொருள்கள், பட்டாசுகள் வாங்க கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பூ மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.

இதைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகைக் கடைகளும் முழு நேரம் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் வழிப்பறி, திருட்டு நடைபெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக மாநகா், மாவட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கடை வீதி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோயில்கள் முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...