கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக 1000 போலீசார் குவிப்பு..!

குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் வெகு சில நாள்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பொருள்கள், பட்டாசுகள் வாங்க கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பூ மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.

இதைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகைக் கடைகளும் முழு நேரம் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் வழிப்பறி, திருட்டு நடைபெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக மாநகா், மாவட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கடை வீதி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோயில்கள் முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...