கோவையில் தீபாவளி தினத்தன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மது பாட்டில்களுடன் மனு அளிக்க வந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்..!

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் மது பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனர்.


கோவை: தீபாவளி நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டாம் என்று கூறி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளன்றும் மது கடைகள் இயங்குவதால் பலரும் மது அருந்திவிட்டு போதையில் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அந்நாளில் மதுவிற்காக அதிக பணத்தை செலவிடுவதாகவும், எனவே தமிழக முதல்வர் தீபாவளி நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித கட்டுபாடுகளையும் விதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.

இதனையடுத்து, மது பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்ட காவலர்கள், அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...