மாநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன.
கோவை: கோவை மாநகரில் சேதமடைந்த மரங்களை கண்டறிந்து அகற்றவும், சேதமடைந்த மரக்கிளைகளை வெட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக மழை பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது. மேலும், காற்றின் வேகமும் சில சமயம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மாநகரில் உள்ள சேதமடைந்த மரங்கள் சாயும் அபாயமும், மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழும் அபாயமும் உள்ளது.
இந்த நிலையில், அபாயகரமாக உள்ள மரங்களை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் மழைநீரால் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இதில், காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாத சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.
கோவையில் கடந்த சில நாட்களாக மழை பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது. மேலும், காற்றின் வேகமும் சில சமயம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மாநகரில் உள்ள சேதமடைந்த மரங்கள் சாயும் அபாயமும், மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழும் அபாயமும் உள்ளது.
இந்த நிலையில், அபாயகரமாக உள்ள மரங்களை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் மழைநீரால் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இதில், காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாத சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.