கிணத்துக்கடவில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்.!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதி சமூக தணிக்கையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.


கோவை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதி சமூக தணிக்கையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதில் கோதவாடி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்குக் கிராம மக்களின் ஒருவரான ராமசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி, துணைத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் புதிய வேலைக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய வட்டார வள அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் சமூகத் தணிக்கையை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் பணியாளர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபைக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...