கிணத்துக்கடவில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்.!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதி சமூக தணிக்கையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.


கோவை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதி சமூக தணிக்கையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதில் கோதவாடி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்குக் கிராம மக்களின் ஒருவரான ராமசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி, துணைத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் புதிய வேலைக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய வட்டார வள அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் சமூகத் தணிக்கையை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் பணியாளர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபைக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...