கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியில் தனியார் தோட்டத்தில் சோதனை செய்ததில் தடையை மீறி சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்தது தெரிய வந்ததையடுத்து, விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியில் தடையை மீறி கள்ளு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளு விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வடபுதூர் பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தோட்டத்தில் கள்ளு விற்பனை செய்த திருமூர்த்தி என்பவரைக் கைது செய்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 லிட்டர் கள்ளுளை பறிமுதல் செய்து அதே இடத்தில்அழித்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளு விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வடபுதூர் பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தோட்டத்தில் கள்ளு விற்பனை செய்த திருமூர்த்தி என்பவரைக் கைது செய்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 லிட்டர் கள்ளுளை பறிமுதல் செய்து அதே இடத்தில்அழித்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.