கோவை உட்பட தமிழ்நாடு முழுவதும் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த ' பலே' கொள்ளையனை மடக்கிப் பிடித்த கோவை போலீசார்..!

இருசக்கர வாகனம், போலி நம்பர் பிளேட்டுகள், கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், போன்றவற்றை பறிமுதல் செய்த சிங்காநல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து உடுமலைபேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

கோவை: தமிழ்நாடு முழுவதும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்து, அழகிகளுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்து வந்த கொள்ளையனை கோவை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 13-10-21 அன்று, கோவை சரவணம்பட்டி அம்மன் கோவில், நியூ வசந்தம் நகர் பகுதியில், மாலை நேரத்தில்ஒரு பெண் அங்குள்ள மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த நிலையில், நேற்று சிங்காநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போதுசந்தேகிக்கப்படும் விதத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை விசாரிக்க முற்பட்டபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவசரமாக வாகனத்தை திருப்ப முயற்சி செய்த போது, அந்த மர்மநபர் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை பிடித்த போலீசார், உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கால் எலும்பில் முறிவு ஏற்ப்பட்டுள்ளதாகதெரிவித்ததையடுத்து, மாவுக்கட்டு போடப்பட்டது.



பின்னர், விசாரணையில் தப்பிக்க முயற்சித்த அந்த நபரின் பெயர் ரவி என்ற ரவிசந்திரன் என்பதும், மதுரை,சிக்கந்தர் சாவடியை சேர்ந்த இவர்,கோவை சரவணம்பட்டியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது மட்டுமல்லாது, கோவை கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர், குனியமுத்தூர், போத்தனூர், மதுரை, தஞ்சை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும், தொடர்ந்து விசாரணை செய்ததில், பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வழக்குகள் ரவி மீது இருக்கும் நிலையில்,இதுவரை போலீசில் பிடிபடாமல் போக்கு காட்டி வந்ததும், மேலும்,, சங்கிலியை பறித்ததும் உடனேஅருகில் உள்ள ஏதாவது அடகுகடையில், அடகுவைத்து பணத்தை பெற்றுக்கொண்டு, விபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது.



கையில் பணம் தீர்ந்ததும், மீண்டும் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ள ரவி,

ஒவ்வொருமுறை சங்கிலி பறிப்பில் ஈடுபடும் போதும் தனது இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை மாற்றியுள்ளதும், விசாரனையில் தெரியவந்துள்ளது.



அவனிடம் இருந்து இருசக்கர வாகனம், போலி நம்பர் பிளேட்டுகள், கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், போன்றவற்றை பறிமுதல் செய்த சிங்காநல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து உடுமலைபேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...