கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் தூங்கிய நகைத் தொழிலாளியிடம் 6 சவரன் நகை, பணம் கொள்ளை.

கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள், நகைத் தொழிலாளி ஒருவர் மது அருந்திவிட்டு, அங்கேயே படுத்துக் உறங்கிய போது, அவரிடம் இருந்து நகை பணம் திருடிச் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: நகைத் தொழிலாளி ஒருவர் மது அருந்தி விட்டு, கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள் படுத்துக் கிடந்த போது அவரிடம் இருந்து நகை, பணம் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் கண்ணன் வயது 52, தங்க நகைத் தொழிலாளி. இன்று கோவைக்கு வந்த அவர், காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர்,போதையில் பஸ் நிலையத்திற்கு வந்த அவர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள்,கண்ணனின் கைப்பையில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க வளையல், மூன்றரை பவுன் தங்க கட்டி ரூபாய் 9 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

பின்னர், இதுகுறித்து கண்ணன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...