கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள், நகைத் தொழிலாளி ஒருவர் மது அருந்திவிட்டு, அங்கேயே படுத்துக் உறங்கிய போது, அவரிடம் இருந்து நகை பணம் திருடிச் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: நகைத் தொழிலாளி ஒருவர் மது அருந்தி விட்டு, கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள் படுத்துக் கிடந்த போது அவரிடம் இருந்து நகை, பணம் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் கண்ணன் வயது 52, தங்க நகைத் தொழிலாளி. இன்று கோவைக்கு வந்த அவர், காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர்,போதையில் பஸ் நிலையத்திற்கு வந்த அவர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள்,கண்ணனின் கைப்பையில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க வளையல், மூன்றரை பவுன் தங்க கட்டி ரூபாய் 9 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.
பின்னர், இதுகுறித்து கண்ணன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் கண்ணன் வயது 52, தங்க நகைத் தொழிலாளி. இன்று கோவைக்கு வந்த அவர், காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர்,போதையில் பஸ் நிலையத்திற்கு வந்த அவர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள்,கண்ணனின் கைப்பையில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க வளையல், மூன்றரை பவுன் தங்க கட்டி ரூபாய் 9 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.
பின்னர், இதுகுறித்து கண்ணன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.