காட்டு யானைகள் வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி விரட்டினர்.
கோவை: வால்பாறையில் கோவில் ஜன்னல் கதவுகளை இடித்து காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பண்ணி மேடு தேயிலைத் தோட்டம். இந்த தோட்டத்தில் முதல் பிரிவில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்.

இந்த நிலையில், நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த 5 காட்டு யானைகள் இந்த கோவிலின் முன் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது. மேலும், உள்ளே புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து நாசப்படுத்தியது. மேலும் அப்பகுதியில் உள்ள மணிக்குமார் என்பவரின் ஸ்கூட்டரை கீழே தள்ளி சீட்டை கிழித்து சேதப்படுத்தியது.
இதையடுத்து, காட்டுயானைகள் இப்பகுதிக்கு வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி துரத்தினர். மேலும் தேயிலைத் தோட்ட காவலர்கள் லாரிகள் மூலம் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.
தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.
இதனால், வனத்துறையினரும் தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பண்ணி மேடு தேயிலைத் தோட்டம். இந்த தோட்டத்தில் முதல் பிரிவில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்.
இந்த நிலையில், நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த 5 காட்டு யானைகள் இந்த கோவிலின் முன் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது. மேலும், உள்ளே புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து நாசப்படுத்தியது. மேலும் அப்பகுதியில் உள்ள மணிக்குமார் என்பவரின் ஸ்கூட்டரை கீழே தள்ளி சீட்டை கிழித்து சேதப்படுத்தியது.
இதையடுத்து, காட்டுயானைகள் இப்பகுதிக்கு வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி துரத்தினர். மேலும் தேயிலைத் தோட்ட காவலர்கள் லாரிகள் மூலம் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.
தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.
இதனால், வனத்துறையினரும் தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.