வால்பாறையில் கோவில் ஜன்னல் கதவுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!!

காட்டு யானைகள் வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி விரட்டினர்.


கோவை: வால்பாறையில் கோவில் ஜன்னல் கதவுகளை இடித்து காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பண்ணி மேடு தேயிலைத் தோட்டம். இந்த தோட்டத்தில் முதல் பிரிவில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்.



இந்த நிலையில், நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த 5 காட்டு யானைகள் இந்த கோவிலின் முன் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது. மேலும், உள்ளே புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து நாசப்படுத்தியது. மேலும் அப்பகுதியில் உள்ள மணிக்குமார் என்பவரின் ஸ்கூட்டரை கீழே தள்ளி சீட்டை கிழித்து சேதப்படுத்தியது.

இதையடுத்து, காட்டுயானைகள் இப்பகுதிக்கு வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி துரத்தினர். மேலும் தேயிலைத் தோட்ட காவலர்கள் லாரிகள் மூலம் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.

தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதனால், வனத்துறையினரும் தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...