வால்பாறையில் கோவில் ஜன்னல் கதவுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!!

காட்டு யானைகள் வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி விரட்டினர்.


கோவை: வால்பாறையில் கோவில் ஜன்னல் கதவுகளை இடித்து காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பண்ணி மேடு தேயிலைத் தோட்டம். இந்த தோட்டத்தில் முதல் பிரிவில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்.



இந்த நிலையில், நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த 5 காட்டு யானைகள் இந்த கோவிலின் முன் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது. மேலும், உள்ளே புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து நாசப்படுத்தியது. மேலும் அப்பகுதியில் உள்ள மணிக்குமார் என்பவரின் ஸ்கூட்டரை கீழே தள்ளி சீட்டை கிழித்து சேதப்படுத்தியது.

இதையடுத்து, காட்டுயானைகள் இப்பகுதிக்கு வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி துரத்தினர். மேலும் தேயிலைத் தோட்ட காவலர்கள் லாரிகள் மூலம் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.

தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதனால், வனத்துறையினரும் தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...