உதகை செல்லும் மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால் ரயில் சேவை ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

இதனை தொடர்ந்து, 180 பயணிகளுக்கும் பயணச்சீட்டுத்தொகை ரயில்வே நிர்வாகத்தால் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டது


கோவை: மேட்டுப்பாளையம் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாறை விழுந்த காரணத்தால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல் சக்கரங்களால் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் இம்மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இம்மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவர். கடந்த பல நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், இரவு நேரங்களில் அதிதீவிர கனமழையும் பெய்து வருகிறது. வழக்கமாக ரயில் புறப்படும் முன்பு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளம் வழியாக நடந்து சென்று தண்டவாளத்தில் ஏதேனும் குறைகள் உள்ளது குறித்து ஆய்வு செய்வர்.



இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் 07.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் கல்லாறு ரயில் நிலையத்தை தாண்டி அடர்லி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென மலை ரயில் பாதையில் பெரிய, பெரிய பாறாங்கற்கள் விழுந்திருப்பதைக் கண்ட ரயில் இன்ஜின் ஓட்டுநர் திடீரென ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், மலை ரயில் பாதையில் விழுந்த பாறாங்கற்களை அகற்ற முற்பட்டனர். ரயில் தண்டவாளத்தில் விழுந்த கற்கள் அனைத்தும் பெரிய அளவிலான பாறாங்கற்கள் என்பதால் ரயில்வே ஊழியர்களால் அகற்ற முடியவில்லை.



இதனையடுத்து, ரயிலை ரத்து செய்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.



இதனால் ஆர்வத்துடன் உதகையின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இதனையடுத்து, 180 பயணிகளுக்கும் பயணச்சீட்டுத்தொகை ரயில்வே நிர்வாகத்தால் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தனியார் வாடகை வாகனங்களில் தங்களது குடும்பத்தினருடன் உதகை நோக்கி மீண்டும் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...