உதகை செல்லும் மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால் ரயில் சேவை ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

இதனை தொடர்ந்து, 180 பயணிகளுக்கும் பயணச்சீட்டுத்தொகை ரயில்வே நிர்வாகத்தால் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டது


கோவை: மேட்டுப்பாளையம் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாறை விழுந்த காரணத்தால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல் சக்கரங்களால் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் இம்மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இம்மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவர். கடந்த பல நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், இரவு நேரங்களில் அதிதீவிர கனமழையும் பெய்து வருகிறது. வழக்கமாக ரயில் புறப்படும் முன்பு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளம் வழியாக நடந்து சென்று தண்டவாளத்தில் ஏதேனும் குறைகள் உள்ளது குறித்து ஆய்வு செய்வர்.



இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் 07.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் கல்லாறு ரயில் நிலையத்தை தாண்டி அடர்லி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென மலை ரயில் பாதையில் பெரிய, பெரிய பாறாங்கற்கள் விழுந்திருப்பதைக் கண்ட ரயில் இன்ஜின் ஓட்டுநர் திடீரென ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், மலை ரயில் பாதையில் விழுந்த பாறாங்கற்களை அகற்ற முற்பட்டனர். ரயில் தண்டவாளத்தில் விழுந்த கற்கள் அனைத்தும் பெரிய அளவிலான பாறாங்கற்கள் என்பதால் ரயில்வே ஊழியர்களால் அகற்ற முடியவில்லை.



இதனையடுத்து, ரயிலை ரத்து செய்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.



இதனால் ஆர்வத்துடன் உதகையின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இதனையடுத்து, 180 பயணிகளுக்கும் பயணச்சீட்டுத்தொகை ரயில்வே நிர்வாகத்தால் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தனியார் வாடகை வாகனங்களில் தங்களது குடும்பத்தினருடன் உதகை நோக்கி மீண்டும் சென்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...