இந்த விபத்தில் பால் ஏற்றி வந்த வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், வேன் ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
கோவை: கோவை கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் கண்டெய்னர் லாரி மீது பால் வேன் மோதி விபத்தில் ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள குடோனில் இருந்து பால் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று கோவைக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
அப்போது, கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் அருகே வரும் போது கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டனர் லாரி மீது பால் ஏற்றி வந்த வேன் பின்பக்கமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பால் ஏற்றி வந்த வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர் சிக்கிக்கொண்டதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சிக்கிக்கொண்ட டிரைவரை மீட்டனர்.
பின்னர், கால் முறிவு ஏற்பட்ட பொள்ளாச்சி வாழைகொம்புநாகூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள குடோனில் இருந்து பால் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று கோவைக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
அப்போது, கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் அருகே வரும் போது கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டனர் லாரி மீது பால் ஏற்றி வந்த வேன் பின்பக்கமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பால் ஏற்றி வந்த வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர் சிக்கிக்கொண்டதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சிக்கிக்கொண்ட டிரைவரை மீட்டனர்.
பின்னர், கால் முறிவு ஏற்பட்ட பொள்ளாச்சி வாழைகொம்புநாகூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.