கிணத்துக்கடவு அருகே கண்டெய்னர் லாரி மீது பால் வேன் மோதி விபத்து - ஓட்டுநர் படுகாயம்..!

இந்த விபத்தில் பால் ஏற்றி வந்த வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், வேன் ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் கண்டெய்னர் லாரி மீது பால் வேன் மோதி விபத்தில் ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள குடோனில் இருந்து பால் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று கோவைக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

அப்போது, கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் அருகே வரும் போது கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டனர் லாரி மீது பால் ஏற்றி வந்த வேன் பின்பக்கமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பால் ஏற்றி வந்த வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.



இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர் சிக்கிக்கொண்டதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சிக்கிக்கொண்ட டிரைவரை மீட்டனர்.

பின்னர், கால் முறிவு ஏற்பட்ட பொள்ளாச்சி வாழைகொம்புநாகூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...