திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 35 ஆடுகள் பரிதாப பலி; 30க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த 'டிவி'க்கள் பழுதாகின.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலி.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று இடி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலியாகினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகணேச மூர்த்தி (57), விவசாயி. நேற்று மாலை, மேய்ச்சலுக்கு சென்று வந்த 80 செம்மறி ஆடுகளை, தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார்.

இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது, தோட்டத்தில் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.. விபத்தில்,மரத்தை ஒட்டியிருந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில், 35 ஆடுகள் கருகி பலியாகின.

புகாரின் பேரில், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஓலப்பாளையம், கொளிஞ்சிகாட்டு வலசு பகுதியில் இடி, மின்னல் காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகளில், 'டிவி' உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...