திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலி.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று இடி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலியாகினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகணேச மூர்த்தி (57), விவசாயி. நேற்று மாலை, மேய்ச்சலுக்கு சென்று வந்த 80 செம்மறி ஆடுகளை, தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார்.
இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது, தோட்டத்தில் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.. விபத்தில்,மரத்தை ஒட்டியிருந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில், 35 ஆடுகள் கருகி பலியாகின.
புகாரின் பேரில், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஓலப்பாளையம், கொளிஞ்சிகாட்டு வலசு பகுதியில் இடி, மின்னல் காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகளில், 'டிவி' உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகணேச மூர்த்தி (57), விவசாயி. நேற்று மாலை, மேய்ச்சலுக்கு சென்று வந்த 80 செம்மறி ஆடுகளை, தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார்.
இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது, தோட்டத்தில் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.. விபத்தில்,மரத்தை ஒட்டியிருந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில், 35 ஆடுகள் கருகி பலியாகின.
புகாரின் பேரில், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஓலப்பாளையம், கொளிஞ்சிகாட்டு வலசு பகுதியில் இடி, மின்னல் காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகளில், 'டிவி' உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின என்பது குறிப்பிடத்தக்கது.