திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 35 ஆடுகள் பரிதாப பலி; 30க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த 'டிவி'க்கள் பழுதாகின.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலி.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று இடி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலியாகினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகணேச மூர்த்தி (57), விவசாயி. நேற்று மாலை, மேய்ச்சலுக்கு சென்று வந்த 80 செம்மறி ஆடுகளை, தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார்.

இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது, தோட்டத்தில் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.. விபத்தில்,மரத்தை ஒட்டியிருந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில், 35 ஆடுகள் கருகி பலியாகின.

புகாரின் பேரில், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஓலப்பாளையம், கொளிஞ்சிகாட்டு வலசு பகுதியில் இடி, மின்னல் காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகளில், 'டிவி' உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...