கோவை தங்கம் மருமகன் ஜாமீன் மனு தள்ளுபடி.

நேற்று ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவிநாசி கிளை சிறையில் இருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

கோவை: கோவையை சேர்ந்த பெண் தொழிலதிபர் மற்றும் அவருடைய தகப்பனாரிடம் கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட கோவை தங்கம் மருமகன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கோவை, காளப்பட்டியை சேர்ந்தவர் சிந்துஜா. ஏற்கனவே, திருமணமாகி கணவனை பிரிந்த இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில்,முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷ்,41, மீது பணமோசடி புகார் அளித்தார்.

அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அருண் பிரகாஷ், கூட்டாக தொழில் செய்யலாம் என்று கூறி 1.5 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு போலி காசோலைகள் கொடுத்து ஏமாற்றியதாக, சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் அளித்த புகாரில் போலீசார் அருண்பிரகாஷை கடந்த 19 ஆம் தேதி கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

அவரை ஜாமினில் விடுவிக்க கோரி, ஜே.எம்:7, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை, விசாரித்த மாஜிஸ்திரேட் தமிழினியன், அருண் பிரகாஷின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார். 

இதற்கிடையில், அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...