நேற்று ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவிநாசி கிளை சிறையில் இருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.
கோவை: கோவையை சேர்ந்த பெண் தொழிலதிபர் மற்றும் அவருடைய தகப்பனாரிடம் கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட கோவை தங்கம் மருமகன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவை, காளப்பட்டியை சேர்ந்தவர் சிந்துஜா. ஏற்கனவே, திருமணமாகி கணவனை பிரிந்த இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில்,முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷ்,41, மீது பணமோசடி புகார் அளித்தார்.
அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அருண் பிரகாஷ், கூட்டாக தொழில் செய்யலாம் என்று கூறி 1.5 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு போலி காசோலைகள் கொடுத்து ஏமாற்றியதாக, சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் அளித்த புகாரில் போலீசார் அருண்பிரகாஷை கடந்த 19 ஆம் தேதி கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவரை ஜாமினில் விடுவிக்க கோரி, ஜே.எம்:7, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை, விசாரித்த மாஜிஸ்திரேட் தமிழினியன், அருண் பிரகாஷின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையில், அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.
கோவை, காளப்பட்டியை சேர்ந்தவர் சிந்துஜா. ஏற்கனவே, திருமணமாகி கணவனை பிரிந்த இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில்,முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷ்,41, மீது பணமோசடி புகார் அளித்தார்.
அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அருண் பிரகாஷ், கூட்டாக தொழில் செய்யலாம் என்று கூறி 1.5 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு போலி காசோலைகள் கொடுத்து ஏமாற்றியதாக, சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் அளித்த புகாரில் போலீசார் அருண்பிரகாஷை கடந்த 19 ஆம் தேதி கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவரை ஜாமினில் விடுவிக்க கோரி, ஜே.எம்:7, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை, விசாரித்த மாஜிஸ்திரேட் தமிழினியன், அருண் பிரகாஷின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையில், அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.