கோவை தங்கம் மருமகன் ஜாமீன் மனு தள்ளுபடி.

நேற்று ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவிநாசி கிளை சிறையில் இருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

கோவை: கோவையை சேர்ந்த பெண் தொழிலதிபர் மற்றும் அவருடைய தகப்பனாரிடம் கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட கோவை தங்கம் மருமகன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கோவை, காளப்பட்டியை சேர்ந்தவர் சிந்துஜா. ஏற்கனவே, திருமணமாகி கணவனை பிரிந்த இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில்,முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷ்,41, மீது பணமோசடி புகார் அளித்தார்.

அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அருண் பிரகாஷ், கூட்டாக தொழில் செய்யலாம் என்று கூறி 1.5 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு போலி காசோலைகள் கொடுத்து ஏமாற்றியதாக, சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் அளித்த புகாரில் போலீசார் அருண்பிரகாஷை கடந்த 19 ஆம் தேதி கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

அவரை ஜாமினில் விடுவிக்க கோரி, ஜே.எம்:7, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை, விசாரித்த மாஜிஸ்திரேட் தமிழினியன், அருண் பிரகாஷின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார். 

இதற்கிடையில், அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...