பேருந்தில் சென்ற பெண்ணிடம் திருடிய ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பேருந்தில் சென்ற பெண்ணிடம் திருடிய ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி விஜயநிர்மலா(43). இவர் நேற்று துடியலூரில் இருந்து தனது மகளுடன் பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
டவுன்ஹால் அருகே இறங்கும்போது பையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பர்ஸில் 3-ஏடிஎம் கார்டுகளை அவர் வைத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரது கனரா வங்கி ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது.
இதை அடுத்து விஜயநிர்மலா வெறைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி விஜயநிர்மலா(43). இவர் நேற்று துடியலூரில் இருந்து தனது மகளுடன் பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
டவுன்ஹால் அருகே இறங்கும்போது பையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பர்ஸில் 3-ஏடிஎம் கார்டுகளை அவர் வைத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரது கனரா வங்கி ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது.
இதை அடுத்து விஜயநிர்மலா வெறைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.