கோவையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் திருடிய ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு.!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் திருடிய ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பேருந்தில் சென்ற பெண்ணிடம் திருடிய ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி விஜயநிர்மலா(43). இவர் நேற்று துடியலூரில் இருந்து தனது மகளுடன் பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.

டவுன்ஹால் அருகே இறங்கும்போது பையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பர்ஸில் 3-ஏடிஎம் கார்டுகளை அவர் வைத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரது கனரா வங்கி ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது.

இதை அடுத்து விஜயநிர்மலா வெறைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...