பொள்ளாச்சியில் 'Boys & Girls Club'- மரக்கன்றுகள் நட்டு எஸ்.பி அறிவுரை.!!

பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் தொடங்கி மரக்கன்றுகள் நட்டு மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் அறிவுரை வழங்கினார். இவர்களை கண்காணிப்பதற்கு Scout Master, Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் தொடங்கி மரக்கன்றுகள் நட்டு மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் அறிவுரை வழங்கினார்.



கோவை மாவ‌ட்ட‌ம் பொள்ளாச்சி உட் கோட்டத்தில் Boys & Girls Club களை துவங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு, குழந்தைகளுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இன்று மாலை பொள்ளாச்சி உட்கோட்டத்தில் பொள்ளாச்சி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவலர் திருமண மண்டபம் மற்றும் MHS பள்ளியின் உள்ளே சிறுவர் மற்றும் சிறுமியருக்கான Boys'& Girls Club- ஐ துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் Boys & Girls Club-ன் நன்மைகள் பற்றியும் அதில் உறுப்பினர் ஆவதற்குரிய விதிமுறைகளைப் பற்றியும், காவல் கண்காணிப்பாளர் தான் கடந்து வந்த பாதையையும், IPSஅதிகாரியான அனுபவங்களையும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார்.



Boys & Girls Club-ஐ கண்காணிப்பதற்கு Scout Master,Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ளனர். அங்குக் குழந்தைகள் விளையாடுவதற்கான உள் மற்றும் வெளி விளையாட்டுப் பொருட்களும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கு சுமார் 200-புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளது. உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பொள்ளாச்சி உட்கோட்ட அலுவலகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியும் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி உட்கோட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுரை வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...