பொள்ளாச்சியில் 'Boys & Girls Club'- மரக்கன்றுகள் நட்டு எஸ்.பி அறிவுரை.!!

பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் தொடங்கி மரக்கன்றுகள் நட்டு மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் அறிவுரை வழங்கினார். இவர்களை கண்காணிப்பதற்கு Scout Master, Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் தொடங்கி மரக்கன்றுகள் நட்டு மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் அறிவுரை வழங்கினார்.



கோவை மாவ‌ட்ட‌ம் பொள்ளாச்சி உட் கோட்டத்தில் Boys & Girls Club களை துவங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு, குழந்தைகளுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இன்று மாலை பொள்ளாச்சி உட்கோட்டத்தில் பொள்ளாச்சி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவலர் திருமண மண்டபம் மற்றும் MHS பள்ளியின் உள்ளே சிறுவர் மற்றும் சிறுமியருக்கான Boys'& Girls Club- ஐ துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் Boys & Girls Club-ன் நன்மைகள் பற்றியும் அதில் உறுப்பினர் ஆவதற்குரிய விதிமுறைகளைப் பற்றியும், காவல் கண்காணிப்பாளர் தான் கடந்து வந்த பாதையையும், IPSஅதிகாரியான அனுபவங்களையும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார்.



Boys & Girls Club-ஐ கண்காணிப்பதற்கு Scout Master,Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ளனர். அங்குக் குழந்தைகள் விளையாடுவதற்கான உள் மற்றும் வெளி விளையாட்டுப் பொருட்களும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கு சுமார் 200-புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளது. உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பொள்ளாச்சி உட்கோட்ட அலுவலகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியும் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி உட்கோட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுரை வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...