கோவையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறைக்கைதி பலி.!!

கோவை மத்தியச் சிறையில், உள்ள சிறை கைதி ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மத்தியச் சிறையில், உள்ள சிறை கைதி ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் தேவாரம் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் ரமேஷ் (44). இவர் கடந்த ஜூன் மாதம் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து கோவை மத்தியச் சிறைக்குக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி மாற்றப்பட்டார். இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய் ஆகியவை இருந்து வந்தது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென ரமேஷுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து கோவை மத்தியச் சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...