கோவை மத்தியச் சிறையில், உள்ள சிறை கைதி ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவை மத்தியச் சிறையில், உள்ள சிறை கைதி ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் தேவாரம் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் ரமேஷ் (44). இவர் கடந்த ஜூன் மாதம் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து கோவை மத்தியச் சிறைக்குக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி மாற்றப்பட்டார். இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய் ஆகியவை இருந்து வந்தது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென ரமேஷுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து கோவை மத்தியச் சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவாரம் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் ரமேஷ் (44). இவர் கடந்த ஜூன் மாதம் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து கோவை மத்தியச் சிறைக்குக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி மாற்றப்பட்டார். இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய் ஆகியவை இருந்து வந்தது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென ரமேஷுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து கோவை மத்தியச் சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.