கோவையில் 3-மாத குழந்தையை அடித்துக் கொன்ற 'பாசக்கார' பாட்டி தப்பி ஓட்டம்.!!

மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் நாகப்பா காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் 31, இன்ஜினியர். இவரது மனைவி ஐஸ்வர்யா 24, இவர்களுக்குக் கடந்த 3-மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தை ஆரியன், என்றும் பெண் குழந்தைக்கு ஆரியா ஸ்ரீ எனும் பெயர் சூட்டினர்.

ஐஸ்வர்யாவின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார். ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காகத் தனது சகோதரரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார். குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகத் தாயார் சாந்தி மருந்து வாங்க அனுப்பி வைத்தார்.

15-வருடங்களாகச் சாந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குழந்தைகளைச் சரமாரியாகத் தாக்கிய பாட்டி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மருத்துவமனையில் சேர்த்தபோது ஆண்குழந்தையின் இறந்துபோனான். ஆரியா ஸ்ரீ சிகிச்சை பெற்று வருகிறார்.



மனநலம் பாதிக்கப்பட்ட சாந்தி குழந்தைகளை அடித்துப் போட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து சாந்தி எங்குச் சென்றார் என்பது குறித்துத் தேடி வருகின்றன.

தொடர்ந்து சாந்தி பிடிபட்டாலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மனநல காப்பக சிகிச்சைக்கு அனுப்பப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...