மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் நாகப்பா காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் 31, இன்ஜினியர். இவரது மனைவி ஐஸ்வர்யா 24, இவர்களுக்குக் கடந்த 3-மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தை ஆரியன், என்றும் பெண் குழந்தைக்கு ஆரியா ஸ்ரீ எனும் பெயர் சூட்டினர்.
ஐஸ்வர்யாவின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார். ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காகத் தனது சகோதரரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார். குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகத் தாயார் சாந்தி மருந்து வாங்க அனுப்பி வைத்தார்.
15-வருடங்களாகச் சாந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குழந்தைகளைச் சரமாரியாகத் தாக்கிய பாட்டி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மருத்துவமனையில் சேர்த்தபோது ஆண்குழந்தையின் இறந்துபோனான். ஆரியா ஸ்ரீ சிகிச்சை பெற்று வருகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்ட சாந்தி குழந்தைகளை அடித்துப் போட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து சாந்தி எங்குச் சென்றார் என்பது குறித்துத் தேடி வருகின்றன.
தொடர்ந்து சாந்தி பிடிபட்டாலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மனநல காப்பக சிகிச்சைக்கு அனுப்பப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளார்.
கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் நாகப்பா காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் 31, இன்ஜினியர். இவரது மனைவி ஐஸ்வர்யா 24, இவர்களுக்குக் கடந்த 3-மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தை ஆரியன், என்றும் பெண் குழந்தைக்கு ஆரியா ஸ்ரீ எனும் பெயர் சூட்டினர்.
ஐஸ்வர்யாவின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார். ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காகத் தனது சகோதரரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார். குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகத் தாயார் சாந்தி மருந்து வாங்க அனுப்பி வைத்தார்.
15-வருடங்களாகச் சாந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குழந்தைகளைச் சரமாரியாகத் தாக்கிய பாட்டி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மருத்துவமனையில் சேர்த்தபோது ஆண்குழந்தையின் இறந்துபோனான். ஆரியா ஸ்ரீ சிகிச்சை பெற்று வருகிறார்.
மனநலம் பாதிக்கப்பட்ட சாந்தி குழந்தைகளை அடித்துப் போட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து சாந்தி எங்குச் சென்றார் என்பது குறித்துத் தேடி வருகின்றன.
தொடர்ந்து சாந்தி பிடிபட்டாலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மனநல காப்பக சிகிச்சைக்கு அனுப்பப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளார்.