கோவையில் 3-மாத குழந்தையை அடித்துக் கொன்ற 'பாசக்கார' பாட்டி தப்பி ஓட்டம்.!!

மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் நாகப்பா காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் 31, இன்ஜினியர். இவரது மனைவி ஐஸ்வர்யா 24, இவர்களுக்குக் கடந்த 3-மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தை ஆரியன், என்றும் பெண் குழந்தைக்கு ஆரியா ஸ்ரீ எனும் பெயர் சூட்டினர்.

ஐஸ்வர்யாவின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார். ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காகத் தனது சகோதரரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார். குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகத் தாயார் சாந்தி மருந்து வாங்க அனுப்பி வைத்தார்.

15-வருடங்களாகச் சாந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குழந்தைகளைச் சரமாரியாகத் தாக்கிய பாட்டி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மருத்துவமனையில் சேர்த்தபோது ஆண்குழந்தையின் இறந்துபோனான். ஆரியா ஸ்ரீ சிகிச்சை பெற்று வருகிறார்.



மனநலம் பாதிக்கப்பட்ட சாந்தி குழந்தைகளை அடித்துப் போட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து சாந்தி எங்குச் சென்றார் என்பது குறித்துத் தேடி வருகின்றன.

தொடர்ந்து சாந்தி பிடிபட்டாலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மனநல காப்பக சிகிச்சைக்கு அனுப்பப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...