கோவை குளத்தில் பிணமாக மிதந்த வாலிபர்: காவல்துறை விசாரணை.!!

உடலில் காயங்கள் இருப்பதால் யாராவது அடித்துக் கொன்று விட்டு உடனே குளத்தில் வீசி விட்டு சென்றார்களா? அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: குறிச்சி குளத்தில், பிணமாக மிதந்த வாலிபர் உடலில் காயங்கள் இருப்பதால் யாராவது அடித்துக் கொன்று விட்டு உடனே குளத்தில் வீசி விட்டுச் சென்றார்களா? அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி குளம். இந்த குளக்கரை பகுதியை ஒட்டிய சாலையில் பொதுமக்கள் இன்று காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி சென்றனர்.

அப்போது குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி அங்கு மிதந்து கொண்டிருந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.



மீட்கப்பட்ட வாலிபருக்கு 35-வயது இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் இவரது தலை, கை, கால், மூக்கு, பகுதிகளில் காயங்கள் இருந்தாலும், கண்ணிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, காவல்துறை அவர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து பிணமாக மீட்கப்பட்ட அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரிக்கின்றனர்.

மேலும், உடலில் காயங்கள் இருப்பதால் யாராவது அடித்துக் கொன்று விட்டு உடனே குளத்தில் வீசி விட்டுச் சென்றார்களா? அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...