திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை பெரியநாயக்கன்பாளையம், நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (32), டிரைவர். இவர் 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகினார். அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
கடந்த 9.5.2017- அன்று ஆனந்தகுமார் சிறுமியை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது ஆனந்தகுமார் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம், நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (32), டிரைவர். இவர் 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகினார். அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
கடந்த 9.5.2017- அன்று ஆனந்தகுமார் சிறுமியை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது ஆனந்தகுமார் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.