கோவையில் மது கேட்டு டாஸ்மார்க் உரிமையாளரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!!

கடந்த 2014ம் ஆண்டு மகாவீர் ஜெயந்தி நாளின்போது மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திய வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.


கோவை: கோவையில் மது கேட்டு டாஸ்மார்க் உரிமையாளரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (38) டாஸ்மாக் பார் உரிமையாளர். கடந்த 2014ம் ஆண்டு மகாவீர் ஜெயந்தி நாளின்போது டாஸ்மாக் பார் மூடப்பட்டிருந்தது.

அப்போது, ரத்தினபுரி 6 முக்கு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான வினோத்குமார் (32), என்பவர் மதுபாட்டில் கேட்டு வந்தார். அதற்கு சேகர் இன்றைக்கு டாஸ்மாக் விடுமுறை மதுபாட்டில் எங்கேயும் கிடைக்காது என்றார்.

இதையடுத்து, அவரிடம் வாக்குவாதம் செய்த வினோத்குமார், மதுபாட்டில் எனக்கு வேண்டும், தராவிட்டால் விட மாட்டேன் என கூறி தகராறு செய்தார். மதுபாட்டில் கிடையாது எனக் கூறிய போது அவரை தாக்கினார். மேலும் தன்னிடம் இருந்த கத்தியால் விரட்டி விரட்டி குத்தினார். இதில் காயமடைந்த சேகர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர், இதுதொடர்பாக ரத்தினபுரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு விசாரணை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வினோத்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...