83-வது வார்டு பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 83-வது வார்டுக்கு உட்பட்ட ராஜவீதி மற்றும் சலிவன் வீதி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, பாலித்தீன் பைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கடையில் 50 மைக்ரானுக்கும் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த க.விஜயகார்த்திகேயன் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சுற்றுப்புரத்திற்கு கேடு விளைவிக்காத பைகளை உபயோகிக்குமாறு கூறினார்.



தொடர்ந்து, 80 மற்றும் 83 ஆகிய பகுதிகளிலிருந்து பெறப்படும் குப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கும் மக்கும் குப்பைகளின் மூலம் உரம் தயாரிக்கும் மையத்தையும், டி.கே.மார்க்கெட் பகுதியையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, தெலுங்கு வீதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரித்து அவர்களது வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதை க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது க.விஜயகார்த்திகேயனுடன், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...