83-வது வார்டு பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 83-வது வார்டுக்கு உட்பட்ட ராஜவீதி மற்றும் சலிவன் வீதி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, பாலித்தீன் பைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கடையில் 50 மைக்ரானுக்கும் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த க.விஜயகார்த்திகேயன் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சுற்றுப்புரத்திற்கு கேடு விளைவிக்காத பைகளை உபயோகிக்குமாறு கூறினார்.



தொடர்ந்து, 80 மற்றும் 83 ஆகிய பகுதிகளிலிருந்து பெறப்படும் குப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கும் மக்கும் குப்பைகளின் மூலம் உரம் தயாரிக்கும் மையத்தையும், டி.கே.மார்க்கெட் பகுதியையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, தெலுங்கு வீதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரித்து அவர்களது வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதை க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது க.விஜயகார்த்திகேயனுடன், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...