விமானப்படை அதிகாரி பாலியல் பலாத்கார வழக்கு; கோவையில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு ஏர்போர்ஸ் சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு செய்தனர். இதற்கு மகளிர் போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவையில் விமானப்படை அதிகாரி பலாத்கார வழக்கில் மகளிர் காவல் துறையே விசாரிக்க அனுமதி கோரிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

கோவை, ரெட்பீல்ட்ஸ் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த, டில்லியை சேர்ந்த 28 வயது விமான படை பெண் அதிகாரியை, சக அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் (29), பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு ஏர்போர்ஸ் சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு செய்தனர். இதற்கு மகளிர் போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு மனு விசாரணை முடிவில், விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் அமித்தேஷை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் போலீசார் மற்றும் விமானப்படை நிர்வாகத்தினர் விசாரணை குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விசாரணை மீண்டும் நாளை 23ம் தேதி நடக்க உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...