கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு ஏர்போர்ஸ் சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு செய்தனர். இதற்கு மகளிர் போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கோவை: கோவையில் விமானப்படை அதிகாரி பலாத்கார வழக்கில் மகளிர் காவல் துறையே விசாரிக்க அனுமதி கோரிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
கோவை, ரெட்பீல்ட்ஸ் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த, டில்லியை சேர்ந்த 28 வயது விமான படை பெண் அதிகாரியை, சக அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் (29), பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு ஏர்போர்ஸ் சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு செய்தனர். இதற்கு மகளிர் போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு மனு விசாரணை முடிவில், விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் அமித்தேஷை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் போலீசார் மற்றும் விமானப்படை நிர்வாகத்தினர் விசாரணை குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விசாரணை மீண்டும் நாளை 23ம் தேதி நடக்க உள்ளது.
கோவை, ரெட்பீல்ட்ஸ் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த, டில்லியை சேர்ந்த 28 வயது விமான படை பெண் அதிகாரியை, சக அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் (29), பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு ஏர்போர்ஸ் சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு செய்தனர். இதற்கு மகளிர் போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு மனு விசாரணை முடிவில், விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் அமித்தேஷை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் போலீசார் மற்றும் விமானப்படை நிர்வாகத்தினர் விசாரணை குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விசாரணை மீண்டும் நாளை 23ம் தேதி நடக்க உள்ளது.