கோவையில் தொடர் திருட்டு... ஒரே நாளில் 3-இடங்களில் திருட்டு அச்சத்தில் மக்கள்.!!

கோவையில் உதிரிப்பாகங்கள் விற்பனை கடை, கோவில் உண்டியல், ஆசிரியர் வீடு, போன்ற இடங்களில் ஒரே நாளில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர் திருட்டு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவையில் உதிரிப்பாகங்கள் விற்பனை கடை, கோவில் உண்டியல், ஆசிரியர் வீடு, போன்ற இடங்களில் ஒரே நாளில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர் திருட்டு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவையில் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ரூபாய் 77 ஆயிரம் பணம் கொள்ளை அடித்தவர்கள் காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள பி.ஆர்.எஸ், கார்டனை சேர்ந்தவர் சபீர் மதராஸ் வயது(41) இவர் பட்டேல் ரோட்டில் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். இன்று காலை கடையைத் திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சபீர் மதராஸ் வாலா கடையின் உள்ளே சென்று பார்த்தார் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையின் கல்லாவில் இருந்த ரூபாய் 7,600 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சபீர் மதராஸ் வாலா காட்டூர் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள்.

இதேபோன்று, பெரியநாயக்கன்பாளையம் தாமும் நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது (41), இவர் சிறுமுகையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 17-ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் திருநல்லூர் கோவிலுக்குச் சென்றார். பின்னர் நேற்று அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 8-பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராஜ் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று பொள்ளாச்சி அடுத்து ஆராய்ச்சி பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (71), இவர் ஒக்கிலி பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

நேற்று பஞ்சலிங்கம் இரவு கோவிலில் பூஜை முடித்து விட்டு கோவிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். காலை வழக்கம் போல பஞ்சலிங்கம் கோவிலுக்குச் சென்றார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் 7,000 மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் வடக்கிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...