கோவையில் விஷ நெடி கலந்த மது விற்பனை செய்தவர் கைது.!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் காக்கப்படும்.



கோவை: கோவையில் விஷ நெடி கலந்த மது விற்பனை செய்தவரை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் உத்தரவில் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பாக எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போலீசார் கஞ்சா, மது, சூதாட்டம், போதை மாத்திரை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் உட்பட சட்டவிரோதமாக விற்பனை செய்யக்கூடிய அனைவரையும் தனிப்படை அமைத்து ரோந்துப்பணியில் மூலமாக அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஷ நெடி கலந்த மதுவை மறைத்து வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களுக்கு, மதுபான பாட்டில்களை விற்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடமான துடியலூர் கோவில் மேடு பகுதிக்குச் சென்று சட்டத்திற்கு விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த M.பழனிவேல்(31) என்பவரை மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆய்வாளர் மீனா பிரியா, M.பழனி வேல் என்பவரைக் கைது செய்து மேற்படி நபரை விசாரித்தபோது, அவர் விஷநெடி கலந்த மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி பாட்டில்களைப் பறிமுதல் செய்தும் மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...