கோவையில் விஷ நெடி கலந்த மது விற்பனை செய்தவர் கைது.!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் காக்கப்படும்.



கோவை: கோவையில் விஷ நெடி கலந்த மது விற்பனை செய்தவரை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் உத்தரவில் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பாக எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போலீசார் கஞ்சா, மது, சூதாட்டம், போதை மாத்திரை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் உட்பட சட்டவிரோதமாக விற்பனை செய்யக்கூடிய அனைவரையும் தனிப்படை அமைத்து ரோந்துப்பணியில் மூலமாக அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஷ நெடி கலந்த மதுவை மறைத்து வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களுக்கு, மதுபான பாட்டில்களை விற்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடமான துடியலூர் கோவில் மேடு பகுதிக்குச் சென்று சட்டத்திற்கு விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த M.பழனிவேல்(31) என்பவரை மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆய்வாளர் மீனா பிரியா, M.பழனி வேல் என்பவரைக் கைது செய்து மேற்படி நபரை விசாரித்தபோது, அவர் விஷநெடி கலந்த மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி பாட்டில்களைப் பறிமுதல் செய்தும் மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...