13 வயது சிறுமி மாயம்; முகநூல் காதலை நம்பி சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தேடல்

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகநூல் காதல் மூலமாக முகம் தெரியாத வாலிபருடன் அந்த சிறுமி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


கோவை: காரமடை அருகே உள்ள தோளாம்பாளையத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மூலமாக பாடம் படித்துவந்தார்.

இதற்காக அவரது பெற்றோர் சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். பாடம் படித்து முடித்துவிட்டு, மீதி நேரத்தில் சிறுமி செல்போன் மூலம் தனது நண்பர்களுடன் ஃபேஸ்புக் போன்ற செயலிகள் மூலமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் நட்பு கிடைத்தது.

நாளடைவில், அவர்கள் நட்பு, காதலாக மாறியதுள்ளது. இருவரும், செல்போன் எண்களை மாற்றி கொண்டு, அதன் மூலமாக பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் சிறுமி வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து, பெற்றோர்கள் அந்த சிறுமியை கண்டித்தனர். இது குறித்து தனது காதலனிடம் கூறிய சிறுமியிடம், நான் உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறேன், அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, அந்த வாலிபருடன் பேசுவதை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர், அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் காரமடை போலீஸில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகநூல் காதல் மூலமாக முகம் தெரியாத வாலிபருடன் அந்த சிறுமி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...