13 வயது சிறுமி மாயம்; முகநூல் காதலை நம்பி சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தேடல்

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகநூல் காதல் மூலமாக முகம் தெரியாத வாலிபருடன் அந்த சிறுமி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


கோவை: காரமடை அருகே உள்ள தோளாம்பாளையத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மூலமாக பாடம் படித்துவந்தார்.

இதற்காக அவரது பெற்றோர் சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். பாடம் படித்து முடித்துவிட்டு, மீதி நேரத்தில் சிறுமி செல்போன் மூலம் தனது நண்பர்களுடன் ஃபேஸ்புக் போன்ற செயலிகள் மூலமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் நட்பு கிடைத்தது.

நாளடைவில், அவர்கள் நட்பு, காதலாக மாறியதுள்ளது. இருவரும், செல்போன் எண்களை மாற்றி கொண்டு, அதன் மூலமாக பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் சிறுமி வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து, பெற்றோர்கள் அந்த சிறுமியை கண்டித்தனர். இது குறித்து தனது காதலனிடம் கூறிய சிறுமியிடம், நான் உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறேன், அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, அந்த வாலிபருடன் பேசுவதை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர், அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் காரமடை போலீஸில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகநூல் காதல் மூலமாக முகம் தெரியாத வாலிபருடன் அந்த சிறுமி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...