மாநகராட்சி விதிக்கும் தொழில் வரியால் வேதனை: வரி விலக்கு கேட்கும் (காட்மா) குறுந்தொழில் முனைவோர்.!!

மாநகராட்சி விதிக்கும் தொழில்வரி மற்றும் தொழிலாளர் வரியிலிருந்து ஐந்து பேருக்கு உட்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று காட்மா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மாநகராட்சி விதிக்கும் தொழில்வரி மற்றும் தொழிலாளர் வரியிலிருந்து ஐந்து பேருக்கு உட்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று காட்மா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவகுமார் கூறியதாவது:-



ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, கொரோனா அச்சுறுத்தலால் பணி குறைவு உள்ளிட்ட நெருக்கடிகளால் குறுந்தொழில் முனைவோர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் எங்களிடம் தொழில் வரி மற்றும் தொழிலாளர் வரி செலுத்தக் கோருகின்றனர்.

குறிப்பாக, ஒரு நிறுவனம் ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றதோ அத்தனை ஆண்டுகளுக்கும் மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ இந்த வரிகளைச் செலுத்த நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் குறுந்தொழில் முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே 1-முதல் 5-தொழிலாளர்கள் பணிபுரியும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இந்த இரண்டு வரிகளிலிருந்தும் முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அதோடு, ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் குறு நிறுவனங்கள் குறித்து அவ்வப்போது புகார் எழுகிறது. இந்தப் புகார் கிடைக்கப்பெற்ற உடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குச் சீல் வைக்கும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாகப் புகார் கிடைத்தால் அதிகாரிகள் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து அங்குச் சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...