மாநகராட்சி விதிக்கும் தொழில் வரியால் வேதனை: வரி விலக்கு கேட்கும் (காட்மா) குறுந்தொழில் முனைவோர்.!!

மாநகராட்சி விதிக்கும் தொழில்வரி மற்றும் தொழிலாளர் வரியிலிருந்து ஐந்து பேருக்கு உட்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று காட்மா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மாநகராட்சி விதிக்கும் தொழில்வரி மற்றும் தொழிலாளர் வரியிலிருந்து ஐந்து பேருக்கு உட்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று காட்மா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவகுமார் கூறியதாவது:-



ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, கொரோனா அச்சுறுத்தலால் பணி குறைவு உள்ளிட்ட நெருக்கடிகளால் குறுந்தொழில் முனைவோர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் எங்களிடம் தொழில் வரி மற்றும் தொழிலாளர் வரி செலுத்தக் கோருகின்றனர்.

குறிப்பாக, ஒரு நிறுவனம் ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றதோ அத்தனை ஆண்டுகளுக்கும் மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ இந்த வரிகளைச் செலுத்த நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் குறுந்தொழில் முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே 1-முதல் 5-தொழிலாளர்கள் பணிபுரியும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இந்த இரண்டு வரிகளிலிருந்தும் முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அதோடு, ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் குறு நிறுவனங்கள் குறித்து அவ்வப்போது புகார் எழுகிறது. இந்தப் புகார் கிடைக்கப்பெற்ற உடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குச் சீல் வைக்கும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாகப் புகார் கிடைத்தால் அதிகாரிகள் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து அங்குச் சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...