மாநகராட்சி விதிக்கும் தொழில் வரியால் வேதனை: வரி விலக்கு கேட்கும் (காட்மா) குறுந்தொழில் முனைவோர்.!!

மாநகராட்சி விதிக்கும் தொழில்வரி மற்றும் தொழிலாளர் வரியிலிருந்து ஐந்து பேருக்கு உட்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று காட்மா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மாநகராட்சி விதிக்கும் தொழில்வரி மற்றும் தொழிலாளர் வரியிலிருந்து ஐந்து பேருக்கு உட்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று காட்மா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவகுமார் கூறியதாவது:-



ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, கொரோனா அச்சுறுத்தலால் பணி குறைவு உள்ளிட்ட நெருக்கடிகளால் குறுந்தொழில் முனைவோர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் எங்களிடம் தொழில் வரி மற்றும் தொழிலாளர் வரி செலுத்தக் கோருகின்றனர்.

குறிப்பாக, ஒரு நிறுவனம் ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றதோ அத்தனை ஆண்டுகளுக்கும் மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ இந்த வரிகளைச் செலுத்த நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் குறுந்தொழில் முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே 1-முதல் 5-தொழிலாளர்கள் பணிபுரியும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இந்த இரண்டு வரிகளிலிருந்தும் முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அதோடு, ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் குறு நிறுவனங்கள் குறித்து அவ்வப்போது புகார் எழுகிறது. இந்தப் புகார் கிடைக்கப்பெற்ற உடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குச் சீல் வைக்கும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாகப் புகார் கிடைத்தால் அதிகாரிகள் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து அங்குச் சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...